1 கொரிந்தியர்
ஆசிரியர்
இந்த புத்தகத்தின் ஆசிரியர் பவுல் என ஏற்றுக்கொள்ளப்படுகிறார் (1 கொரிந்தியர். 1: 1-2; 16: 21) பவுலின் நிருபமும் எனவும் அழைக்கப்படுகிறது. சில சமயங்களில், எபேசுவில் பவுல் இருந்த சமயத்தில் அல்லது அதற்கு முன்பு, 1 கொரிந்தியர் (5: 10) க்கு முன்பு கடிதத்தை எழுதினார். கொரிந்தியர் கடிதத்தை தவறாகப் புரிந்து கொண்டார்கள், துரதிருஷ்டவசமாக அந்த கடிதம் இனி வெளியாகவில்லை. இந்த “முந்தைய கடிதத்தின்” உள்ளடக்கங்கள் (அது அழைக்கப்படுவது போலவே), முழுமையாக அறியப்படவில்லை, கொரிந்து சபையிலிருந்து பவுல் பெற்ற கடிதத்திற்கு பதில் கடிதமாக முதலாம் நிருபத்தை எழுதுகிறார், கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திற்கு முன்பு பவுல் எழுதிய கடிதத்திற்கு கொரிந்தியர்கள் பதில் கடிதம் எழுதியிருக்கலாம்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
கிபி. 55 முதல் 56 வரையான காலப்பகுதியில் ஏறக்குறைய எழுதப்பட்டிருக்கலாம்.
இந்த நிருபம் எபேசுவிலிருந்து எழுதப்பட்டதாகும் (1 கொரி. 16: 8).
யாருக்காக எழுதப்பட்டது
கொரிந்தியருக்கான முதலாம் நிருபத்தின் உத்தேசிக்கப்பட்ட வாசகர்கள் கொரிந்துவிலிருந்த தேவனின் திருச்சபையின் உறுப்பினர்கள் ஆவர். (1 கொரிந்தியர் 1: 2). இருந்தபோதிலும் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும், சகல இடங்களிலும்” (1: 2) என்று பவுல் தன்னுடைய நோக்கமுள்ள வாசகர்களாக அனைத்து வாசகர்களுக்கும் எழுதுகிறார்.
எழுதப்பட்ட நோக்கம்
கொரிந்து சபையின் தற்போதைய நிலைமையைப் பற்றி பவுல் பல ஆதாரங்களில் இருந்து தகவலைப் பெற்றுக்கொண்டார். இந்த கடிதத்தை எழுதுவதற்கான அவரது நோக்கம், திருச்சபையின் பலவீனமான பகுதியைக் கட்டியெழுப்புதல், அறிவுறுத்துதல், பிரிவினைகள் போன்ற தவறான பழக்கவழக்கங்களை சரிசெய்தல் ஆகியனவாகும், (1 கொரி. 1: 10-4: 21), தவறான போதனை (உயிர்த்தெழுதல் பற்றிய தவறான போதனை) ஆகியவற்றை செய்தல் ஆகும். (1 கொரிந்தியர். 15), ஒழுக்கக்கேடு (1 கொரி. 5, 6: 12-20), மற்றும் கர்த்தரின் இரா போஜனம் குற்றப்படுத்தப்படுதல் (1 கொரிந்தியர் 11: 17-34). கொரிந்திய தேவாலயம் வரங்கள் நிறைந்ததாக இருந்தது (1: 4-7) ஆனால் முதிர்ச்சியற்ற நிலை மற்றும் ஆவிக்குரியதல்லாததாக இருந்தது (3: 1-4) ஆகவே பவுல், சபைக்கு நடுவே காணப்படும் பாவப்பிரச்சனைகளை சபையானது எவ்விதம் கையாளவேண்டும் என்ற ஒரு முக்கியமான மாதிரியை வழங்கினார். சம்பந்தப்பட்ட பிரிவினைகள் மற்றும் அனைத்து விதமான ஒழுக்கக்கேடுகளுக்கும் ஒரு கண்டும் காணாமல் இருப்பதற்கு பதிலாக, அவர் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார்.
மையக் கருத்து
விசுவாசியின் நடத்தை
பொருளடக்கம்
1. அறிமுகம் — 1:1-9
2. கொரிந்து சபையிலுள்ள பிரிவினைகள் — 1:10-4:21
3. ஒழுக்க மற்றும் நெறிமுறை ஆகியவற்றில் காணப்பட்ட ஒழுங்கின்மை — 5:1-6:20
4. திருமணத்திற்கான கோட்பாடுகள் — 7:1-40
5. அப்போஸ்தலர்களின் சுயாதீனம் — 8:1-11:1
6. ஆராதனை பற்றிய அறிவுரைகள் — 11:2-34
7. ஆவியின் வரங்கள் — 12:1-14:40
8. உயிர்த்தெழுதலைக் குறித்த உபதேசம் — 15:1-16:24