ரோமர்
ஆசிரியர்
ரோமருக்கு எழுதிய நிருபத்தின் ஆசிரியர் பவுல் என்று ரோமர் 1: 1 சுட்டிக்காட்டுகிறது, 16 வயதான நீரோ ரோம பேரரசனாக பொறுப்பெடுத்து, மூன்று வருடங்கள் கழித்து, கிரேக்க நகரமாகிய கொரிந்துவிலிருந்து ரோமருக்கு எழுதினார். முக்கிய கிரேக்க நகரம் பாலியல் ஒழுக்கக்கேடு மற்றும் சிலை வணக்கத்தின் மையமாக இருந்தது. ஆகவே, மனிதகுலத்தின் பாவத்தையோ அல்லது தேவனுடைய கிருபையின் வல்லமையைப் பற்றி பவுல் ரோமரில் எழுதியபோது அதிசயமாகவும், வாழ்க்கையை மாற்றியமைக்ககூடியதாகவும் இருந்தது, அவர் பேசியதை அவர் அறிந்திருந்தார். கிறிஸ்தவ சுவிசேஷத்தின் அடிப்படைகளை பவுல் கருத்தில் எடுத்துக்கொள்வது, முக்கிய குறிப்புகள் அனைத்தையும் தொடுகிறது: தேவனுடைய பரிசுத்தத்தன்மை, மனிதகுலத்தின் பாவம், இயேசு கிறிஸ்து வழங்கும் இரட்சிப்பின் கிருபை.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறத்தாழ கிபி 57 காலகட்டத்தில் கொரிந்துவிலிருந்து எழுதப்பட்டது.
எழுதப்பட்ட முக்கிய இடம் ரோமாக இருக்கலாம்.
யாருக்காக எழுதப்பட்டது
ரோமப் பேரரசின் தலைநகரான ரோமில் (ரோமர் 1: 7) தேவாலயத்தின் உறுப்பினர்கள், அதாவது தேவனால் நேசிக்கப்படுகிற, அவருடைய அனைத்து பரிசுத்தவான்கள்.
எழுதப்பட்ட நோக்கம்
ரோமருக்கு எழுதிய நிருபம் கிறிஸ்தவ உபதேசத்தின் தெளிவான மற்றும் மிகவும் முறைப்படுத்தப்பட்ட விளக்கமாக உள்ளது. எல்லா மனிதகுலத்தின் பாவத்தன்மையும் பற்றி பவுல் விவாதிக்கத் தொடங்குகிறார். தேவனுக்கு எதிரான நமது கலகம் காரணமாக எல்லா மக்களும் குற்றவாளிகள் என்று தீர்க்கப்பட்டிருக்கின்றனர். எனினும், தேவன் அவரது கிருபையில் அவரது குமாரனில் வைக்கும் நம்பிக்கை மூலம் நம்மை நீதிமான்களாக்குகிறார். நாம் தேவனால் நீதிமான்களாக்கப்படும்போது, மீட்பை அல்லது இரட்சிப்பை பெறுகிறோம், ஏனென்றால் கிறிஸ்துவின் இரத்தம் நம் பாவத்தை மறைக்கிறது. இந்த விஷயங்களைக்குறித்த பவுலின் அணுகுமுறையானது, ஒரு நபர் தன்னுடைய பாவத்தின் தண்டனையிலிருந்து, எவ்வாறு தனது பாவத்தின் வல்லமையிலிருந்து காப்பாற்றப்பட முடியும் என்பதை தெளிவான மற்றும் முழுமையான விளக்கத்தைக் கொடுக்கிறது.
மையக் கருத்து
தேவனுடைய நீதி
பொருளடக்கம்
1. பாவத்திற்கான நியாயம்தீர்க்கப்படுதலின் நிலை மற்றும் நீதியின் தேவை — 1:18-3:20
2. நீதியை சுமத்துதல், நீதிமானாக்குதல் — 3:21-5:21
3. நீதியை வழங்குதல், பரிசுத்தமாக்குதல் — 6:1-8:39
4. இஸ்ரவேலுக்கு தெய்வீக பாதுகாப்பு — 9:1-11:36
5. நீதியை நடைமுறையில் செயல்படுத்துதல் — 12:1-15:13
6. முடிவு: தனிப்பட்ட செய்தி — 15:14-16:27