2 கொரிந்தியர்
ஆசிரியர்
பவுல் 2 கொரிந்தியர் நிருபத்தை தனது வாழ்க்கையின் பெலவீனமான நேரத்தில் எழுதினார். கொரிந்து சபையில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் அறிந்திருந்தார், எனவே உள்ளூர் சபை விசுவாசிகளின் ஒற்றுமையைக் காப்பாற்ற அவர் நடவடிக்கை எடுக்க முயன்றார். பவுல் அந்த கடிதத்தை எழுதியபோது, கொரிந்துவிலிருந்த விசுவாசிகளின் மீதுள்ள அவருடைய அன்பின் காரணமாக அவர் துன்பத்தையும் துயரத்தையும் அனுபவித்தார். துன்பங்கள், மனிதனின் பலவீனங்களை வெளிப்படுத்துகின்றன, ஆனால் தேவனின் தகுதியை வெளிப்படுத்துகின்றன-என் கிருபை உங்களுக்கு போதுமானது, உன் பலவீனத்தில் என் பெலன் பூரணமாக விளங்கும் (2 கொரி 12: 7-10). அந்த கடிதத்தில், பவுல் தன்னுடைய ஊழியத்தையும் அப்போஸ்தல அதிகாரத்தையும் பலமாக பாதுகாக்கிறார். அவர் தேவனுடைய சித்தத்தினாலே கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருக்கிறார் என்பதை மீண்டும் உறுதி செய்வதன் மூலம் அவர் கடிதம் தொடங்குகிறார் (2 கொரி. 1: 1). அப்போஸ்தலனையும் கிறிஸ்தவ விசுவாசத்தையும் பற்றி பவுல் எழுதிய இக்கடிதம் நிறைய வெளிப்படுத்துகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
கிபி. 55 முதல் 56 வரையான காலப்பகுதியில் ஏறக்குறைய எழுதப்பட்டது.
கொரிந்தியருக்கு பவுல் எழுதிய இரண்டாம் கடிதம் மக்கதோனியாவிலிருந்து எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
இந்த நிருபம் கொரிந்துவிலுள்ள தேவனுடைய சபைக்கும் அகாயாவிலுள்ள கொரிந்து பட்டணத்தை தலைநகரமாகக் கொண்ட ரோமானிய மாகாணமாகிய அகாயாவிலுள்ள மக்களுக்குக் கொடுக்கப்பட்டதாகும் (2 கொரி 1: 1).
எழுதப்பட்ட நோக்கம்
கொரிந்தியர்கள் பவுலின் வேதனையுள்ள கடிதத்திற்கு (1: 3-4; 7: 8-9, 12: 13) சாதகமான பதிலளித்ததினால் பவுல் தான் உணர்ந்த ஆறுதலையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்த, ஆசியா பிராந்தியத்தில் அவர் கடந்து சென்ற துயரத்தை அவர்கள் அறிந்துகொள்வதற்காக (1: 8-11), இடறல் உண்டாக்குபவர்களை அவர்கள் மன்னிக்கும்படி கேட்பதற்காக (2: 5-11), அவர்கள் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படக்கூடாது என எச்சரிப்பதற்காக (6: 14-7: 4), கிறிஸ்தவ ஊழியத்தின் உன்னதமான அழைப்பையும் உண்மைத் தன்மையையும் அவர்களுக்கு விளக்குவதற்காக (2: 14-7: 4), கொரிந்தியர்களுக்கு கொடுத்தலின் கிருபையைக் கற்றுக்கொடுக்கும்படியாகவும், எருசலேமில் உள்ள கிறிஸ்தவர்களுக்காக சேகரிப்பதை நிறைவு செய்வதை உறுதிப்படுத்தும்படியாக என இதுபோன்ற அநேக நோக்கங்களை பவுல் இந்த நிருபத்தை எழுதும்போது தனது மனதில் கொண்டிருந்தார். (அதிகாரம் 8 9).
மையக் கருத்து
பவுல் தன்னுடைய அப்போஸ்தல பட்டத்தை தற்காக்கிறார்.
பொருளடக்கம்
1. தனது ஊழியத்தைக் குறித்து பவுலின் விளக்கம் — 1:1-7:16
2. எருசலேமில் ஏழைகளுக்காக சேகரித்தல் — 8:1-9:15
3. பவுல் தனது அதிகாரத்தை தற்காத்துக்கொள்ளுதல் — 10:1-13:10
4. திரித்துவக் கருத்தோட்டத்துடன் ஆசீர்வாதம் வழங்குதல் — 13:11-14