சகரியா
ஆசிரியர்
இதன் ஆசிரியர் இத்தோவின் மகனான பொகியாவின் குமாரனாகிய சகரியா என்று 1:1 ல் குறிப்பிடுகிறது. சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த ஆசாரிய குடும்பங்களில் இத்தோ ஒரு தலைவனாக இருந்தான் என்று நெகேமியா 12:4, 16 ல் குறிப்பிடுகிறது. எருசலேமுக்கு திரும்பி வந்தபோது சகரியா ஒரு பையனாக இருந்திருப்பான். குடும்ப வம்ச பிரகாரமாக இவன் ஆசாரியனாகவும் தேவ அழைப்பினால் ஒரு தீர்க்கதரிசியாகவும் இருந்தான். ஆலயத்தில் ஊழியம் செய்யாவிட்டாலும், யூதர்களின் ஆராதனை காரியங்களை நன்கு அறிந்தவனாக இருந்தான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 520 க்கும் 480 கிமுக்கும். இடையில் எழுதப்பட்டது.
சிறையிருப்பிலிருந்து வந்த பிறகு எழுதப்பட்டது. 1-8 அதிகாரங்கள் ஆலயம் கட்டப்படுமுன் எழுதப்பட்டது. 9-14 அதிகாரங்கள் ஆலயம் கட்டப்பட்டப் பிறகு எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
எருசலேமில் வாழ்ந்த ஜனங்களுக்கும் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
மீதியானவர்களுக்கு, நம்பிக்கை தரவும், மேசியாவாகிய இயேசுவின் வருகைக்கும் எதிர்ப்பார்த்திருக்கவும் எழுதப்பட்டது. தேவன் தம் ஜனங்களை, தீர்க்கதரிசிகள் மூலமாக எச்சரிக்கவும், திருத்தவும் உபயோகித்துக் கொள்கிறார் ஆனால், ஜனங்கள் செவிகொடுக்கவில்லை அவர்களுடைய பாவம் தேவனுடைய தண்டனையை கொண்டுவந்தது. பொய் தீர்க்கத்தரிசனத்தைக் குறித்தும் எழுதியிருக்கிறது.
மையக் கருத்து
தேவனுடைய விடுதலை
பொருளடக்கம்
1 மனம்திரும்ப அழைத்தல் — 1:1-6
2 சகரியாவின் தரிசனங்கள் — 1:7-6:15
3 உபவாசத்தைக்குறித்த கேள்விகள் — 7:1-8:23
4 வருங்காலத்தைக் குறித்த பாரங்கள் — 9:1-14:21