மல்கியா
ஆசிரியர்
மல்கியா 1:1 ன்படி தீர்க்கதரிசி மல்கியா தான் இதன் ஆசிரியர் என்று உறுதியாகிறது. எபிரேய மொழியில் இதன் அர்த்தம், “தூதன்”, தேவனுடைய செய்தியை தேவஜனங்களுக்கு தரும்படியான ஊழியத்தை செய்கிறான் என்பதை காட்டுகிறது. இரண்டு விதத்தில் “மல்கியா” இந்த புத்தகத்தில் தூது சொல்கிறான், அது என்னவென்றால், வரும் தேவனுடைய நாளில், திரும்ப பெரிய தீர்க்கதரிசியான எலியாவை பூமிக்கு அனுப்புவேன் என்பதாகும்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்.
ஏறக்குறைய கிமு 430 ல் எழுதப்பட்டது.
இது பாபிலோன் சிறையிருப்புக்கு பிறகு எழுதப்பட்ட புத்தகமாகும்.
யாருக்காக எழுதப்பட்டது.
எருசலேமில் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களுக்கும் எங்குமுள்ள தேவ ஜனங்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் ஜனங்களுக்கு உதவி செய்கிறார், ஜனங்கள் செய்கிற தீமையானக் காரியங்களுக்கு தாம் நியாயாதிபதியாக வரும்போது கணக்கு தரவேண்டும், என்பதை ஞாபகப்படுத்தவும், உடன்படிக்கையையின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள தீமையானக் காரியங்களை விட்டு மனத்திரும்பவேண்டும் என்று ஞாபகப்படுத்துகிறான். தேவனிடம் திரும்பும்படியாக தேவன் மல்கியா மூலமாக எச்சரிக்கிறார். பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாக, தேவனுடைய நியாயத்தையும், மேசியா வருகையின் மூலம், ஜனங்கள் திரும்ப நாட்டபடுவார்கள் என்ற வாக்குதத்தமும் இஸ்ரவேலர்களின் காதுகளில் தொனித்துக் கொண்டிருந்தது.
மையக் கருத்து
நடைமுறைக் காரியங்கள் கண்டிக்கப்பட்டது.
பொருளடக்கம்
1 ஆசாரியர்கள் தேவனை கனப்படுத்த அறிவுறுத்தப்பட்டார்கள் — 1:1-2:9
2. யூத ஜனங்கள் உண்மையாயிருக்க அறிவுறுத்தப்பட்டார்கள் — 2:10-3:6
3. யூதர்கள் தேவனிடம் திரும்ப வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டார்கள் — 3:7-4:6