ஆகாய்
ஆசிரியர்
தீர்க்கதரிசி ஆகாய் இந்த புத்தகத்தின் ஆசிரியர் என்று ஆகாய் 1:1, சொல்லுகிறது. எருசலேமின் யூதர்களுக்கு நான்கு செய்திகளை பதிவிட்டிருக்கிறார். ஆகாய் 2:3 ன்படி தீர்க்கதரிசி, எருசலேமின் அழிவுக்கு முன்பே ஆலயத்தைப் பார்த்திருக்கிறார். இஸ்ரவேல் ஜாதிகளின் வெளிச்சமாக, தன்னுடைய உரிமையான இடத்தை சொந்தமாக்கிக்கொள்ளும்படி அதிக வாஞ்சையாய் இருக்கிறான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 520 ல் எழுதப்பட்டது.
இது பாபிலோனிய சிறையிருப்பிற்கு பின்பு எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
எருசலேமில் வாழ்ந்த மக்களுக்கும், சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்த மக்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்த யூதர்கள் அந்த நிலைமையில் திருப்தி அடையாமல், விசுவாசத்தோடு எழுந்து ஆலயத்தை கட்ட முயற்சி எடுக்கும்படி உற்சாகப்படுத்துகிறான், அப்படி ஆலயத்தை கட்டுகிறவர்களை, யெகோவா தேவன் ஆசிர்வதிப்பார் என்றும் உற்சாகப்படுத்துகிறான். முரட்டாட்டம் செய்திருந்தாலும் ஆண்டவரின் காரியத்தில் இடம் உண்டு என்றும் உற்சாகப்படுத்துகிறான்.
மையக் கருத்து
தேவாலயத்தை திரும்ப கட்டுதல்
பொருளடக்கம்
1 ஆலயத்தைக் கட்ட அழைப்பு. — 1:1-15
2 தேவனில் தைரியம் கொள்ளுங்கள் — 2:1-9
3 பரிசுத்தமான வாழ்க்கைக்கு அழைப்பு — 2:10-19
4 வருங்காலத்தில் நம்பிக்கை வைக்க அழைப்பு — 2:20-23