ஆமோஸ்
ஆசிரியர்
ஆமோஸ் 1:1 ன்படி, தீர்க்கதரிசி ஆமோஸ் தான் இதன் ஆசிரியர் என்று கூறுகிறது. தெக்கோவா ஊர் மேய்ப்பர்கள் மத்தியில் வாழ்ந்தான். தான் தீர்க்கதரிசிகள் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்று எழுதுகிறான். தேவன் அக்கினியாலும் வெட்டுகிகிகளாலும் இஸ்ரவேலை நியயாம்தீர்க்க இருந்தார், ஆனால் ஆமோசின் ஜெபத்தால் தப்பிவிக்கப்பட்டது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 760 க்கும் 750 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேலின் வடதேசத்தின் உள்ள பெத்தேல், சமாரிய ஊர்களில் பிரசங்கம் செய்தான்.
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேலின் வடதேசத்தின் மக்களுக்காகவும், வருங்காலத்தில் வேதம் வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் பெருமையை எதிர்க்கிறார். மக்கள் தன்னிடம் உள்ள ஆசிர்வாதம் போதும் தேவன் அவசியம் இல்லை என்று சொல்லி, ஆசிர்வாதத்தை கொடுத்த தேவனையே மறந்து விட்டார்கள். எல்லாரையும் தேவன் மதிக்கிறார், ஏழைகளை இழிவுப்படுத்துவதைக் குறித்து எச்சரிக்கிறார். தேவனை மகிமைப்படுத்தும் மெய்யான ஆராதனையை விரும்புகிறார். பணக்காரர்கள் சுயநலவாதிகளாக வாழ்ந்தார்கள், தன் பிறனை நேசிக்கவில்லை, சொந்த இலாபத்தில் கவனமாக இருந்தார்கள் ஆகையால் தேவனுடைய வார்த்தை ஆமோஸ் மூலமாக அவர்களுக்கு விரோதமாக வந்தது.
மையக் கருத்து
நியாயத்தீர்ப்பு
பொருளடக்கம்
1. தேசங்களின் அழிவு — 1:1-2:16
2. தீர்க்கதரிசன அழைப்பு — 3:1-8
3. இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்பு — 3:9-9:10
4. மீட்டெடுப்பு — 9:11-15