யோவேல்
ஆசிரியர்
யோவேல் தான் இதன் ஆசிரியர் என்று இந்த புத்தகத்தில் எழிதியுள்ளது (யோவேல் 1:1). இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டக் காரியத்தை தவிர வேறு காரியங்கள் இந்த தீர்க்கதரிசியைக் குறித்து அதிகமாக அறியப்படவில்லை. பெத்துவேலின் குமாரன் என்று தன்னை அறியப்படுத்துகிறான், யூத ஜனங்களுக்கு பிரசங்கித்தான், எருசலேமைக்குறித்து அதிகமாக சொல்லுகிறான். யூதாவில் உள்ள ஆலயத்தின் காரியங்களைக்குறித்தும் ஆசாரியர்களைக் குறித்தும், அதிகம் அறிந்தவனாக இருந்தான். (யோவேல் 1:13-14; 2:14, 17).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 835 க்கும் 600 க்கும். இடையில் எழுதப்பட்டது.
பெர்சியா சாம்ராஜ்ஜியத்தின் காலத்தில் வாழ்ந்தவன் என்று கருதப்படுகிறது. பெர்சியரின் காலத்தில் சில யூதர்கள் எருசலேமுக்கு திரும்பிவர அனுமதிக்கப்பட்டார்கள், அவர்கள் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள். யோவேல் ஆலயக்காரியத்தைக் குறித்து நான்கு அறிந்தவனாய் இருந்தான்.
ஆகையால் இஸ்ரவேலர் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பிறகு எழுதப்பட்டு இருக்கலாம்.
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேலர்களுக்கும் வேதத்தை வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் இரக்கம் உள்ளவர், மனம்திரும்பினவர்களுக்கு தேவன் மன்னிப்பு அளிக்கிறார் இரண்டு காரியங்களை சிறப்பம்சங்களாக இந்த புத்தகம் வர்ணிக்கிறது. ஒன்று வெட்டுகிளிகளின் படையெடுப்பும், இரண்டு பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலும் ஆகும். இதின் நிறைவேறுதல் அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரத்தில் பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது.
மையக் கருத்து
கர்த்தருடைய நாள்
பொருளடக்கம்
1. இஸ்ரவேல் வெட்டுகிளிகளால் சூழப்பட்டது — 1:1-20
2. தேவனின் தண்டனை — 2:1-17
3. இஸ்ரவேல் மறுபடியும் நாட்டப்பட்டது — 2:18-32
4. இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்த தேசங்களின் நியாயத்தீர்ப்பு — 3:1-21