ஓசியா
ஆசிரியர்
இந்த புத்தகத்தின் அதிக பகுதிகள் ஓசியாவினால் பேசப்பட்டவைகள். தானே எழுதினானோ, அல்லது மற்றவர்கள் அவன் சொன்ன கர்த்தருடைய வசனங்களை கேட்டு தொகுக்கப்பட்டு, எழுதினார்களோ என்று தெரியவில்லை. இந்த தீர்க்கதரிசியின் பெயரின் அர்த்தம் “இரட்சிப்பு” தன்னுடைய வாழ்க்கையோடு தன் செய்திகளை இணைக்கிறான். இந்த பெண் துரோகம் செய்வாள் என்று தெரிந்தும் திருமணம் செய்துக்கொண்டு, மகன்களை பெற்று, அவர்களுக்கு பெயரும் தீர்க்கதரிசன அர்த்தத்துடன் இஸ்ரவேல் மக்களுக்கு நியாயத்தீர்ப்பு வரும் என்று வைத்து, செய்தி அளித்து தன் வாழ்க்கையை இணைக்கிறான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 750 க்கும் 710 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
ஓசியாவின் செய்திகள் சேர்க்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, பிரதிகள் எடுக்கப்பட்டது. இந்த காரியங்கள் எப்பொழுது நடந்தது என்று சரியாக தெரியாவிட்டாலும், எருசலேமின் அழிவுக்குமுன் எழுதப்பட்டது என்று நிச்சயிக்கப்படுகிறது.
யாருக்காக எழுதப்பட்டது
விஷேசமாக இந்த புத்தகம் இஸ்ரவேலின் வட இராஜ்ஜியத்திற்கு எழுதப்பட்டது. அவர்கள் சிறைப்பட்டு போனப்பிறகு, இந்த புத்தகம் எச்சரிப்புக்காகவும், மக்கள் மனம்திரும்பி ஆண்டவரிடம் மறுபடியும் திரும்பக் காக்கப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவனுக்கு, இஸ்ரவேல் மக்களும், நாமும் உண்மையாயிருக்கவேண்டும் என்று ஓசியா ஞாபகப்படுத்துகிறான். யெகோவா தான் ஒரே மெய்யான தேவன். முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்ற தான் விரும்புகிறார். பாவம் நியயாத்தீர்ப்பின் அழிவைக் கொண்டுவரும். எதிரி சேனையினால் உண்டாகும் அடிமைத்தனத்தின் வேதனைகளை எச்சரித்தான். தேவன் மனிதனைப் போல் வாக்குகளை மீறுகிறவர் அல்ல. இஸ்ரவேலர்கள் பாவம் செய்திருந்தும் தேவன் அவர்களை தொடர்ந்து அன்புகூர்ந்தார், மறுபடியும் தம்மிடம் சேர்த்துக்கொள்ள வழி செய்தார். இஸ்ரவேலர்கள் விக்கிர ஆராதனை செய்து, பாவத்திற்கும், தண்டனைக்கும் தகுதியாயிருந்தலும், அன்பினிமித்தம் மன்னித்தார், அதற்கு உவமையாக, ஓசியாவை கோமர் என்ற சோரம்போகும் பெண்ணை திருமணம் செய்து காட்டினான்.
மையக் கருத்து
சோரம்போகுதல்
பொருளடக்கம்
1 ஓசியாவின் உண்மையில்லாத மனைவி. — 1:1-11
2 இஸ்ரவேலின் மீது வரும் நியாயத்தீர்ப்பும், தண்டனைகளும். — 2:1-23
3 தேவன் தமது மக்களை மீட்டார். — 3:1-5
4 இஸ்ரவேல் சோரம்போனதால் ஏற்பட்ட தண்டனை — 4:1-10:15
5 இஸ்ரவேலின் மீது, தேவனின் அன்பு. — 11:1-14:9