2 நாளாகமம்
ஆசிரியர்
யூத பாரம்பரியம் எஸ்றா தான் இதன் ஆசிரியர் என்று உறுதிப்படுத்துகிறது. சாலோமோனின் அரசாட்சியோடு இந்த புத்தகம் தொடங்குகிறது. சாலோமோனின் மரணத்திற்கு பிறகு இராஜ்ஜியம் இரண்டாகப் பிரிந்து விட்டது. 2 நாளாகமம், எபிரேயர்களின் சரித்திரத்தை சாலொமோன் இராஜாவில் தொடங்கி பாபிலோனின் சிறையிருப்பு வரைக் காட்டுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 450 க்கும் 425 க்கும். இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு திரும்பி வந்தபின்பு எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
பண்டைக்காலத்து இஸ்ரவேலர்களுக்கும் வேதம் வாசிக்கிறவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
2 சாமுவேல் 2 இராஜாக்கள் புத்தகங்களில் சொல்லப்பட்டவைகளைத் தான் இந்த 2 நாளாகம புத்தகங்களும் கூறுகிறது. அந்தக் காலத்தில் ஆசாரியர்கள் மூலமாய் செய்யப்பட்ட காரியங்களுக்கு அதிக முக்கியத்தவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இஸ்ரவேல் தேசத்தில் நடந்த பக்திக் காரியங்களை இந்த இரண்டு புத்தகங்களும் கணித்துக் காட்டுகிறது.
மையக் கருத்து
இஸ்ரவேலின் ஆவிக்குரிய பாரம்பரியங்கள்.
பொருளடக்கம்
1. சாலோமோனின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் — 1:1-9:31
2. ரெகோபெயாமின் காலத்திலிருந்து உசியா இராஜாவின் காலம் வரை நடந்த நிகழ்ச்சிகள் — 10:1-28:37
3. எசேக்கியா இராஜாக் காலத்திலிருந்து யூத தேசம் சிறைப்பட்டு போகும் காலம் வரை நடந்த நிகழ்ச்சிகள் — 29:1-36:23