ஆபகூக்
ஆசிரியர்
அதிகாரம் 1:1 ல் ஆபகூக் தான் ஆசிரியர் என்று அடையாளம் காட்டுகிறது. அவனுடைய பெயரைத் தவிர வேறே எந்தக் காரியமும் அவனைக்குறித்து சொல்லப்படவில்லை. ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி என்று அழைக்கபடுவதால், இஸ்ரவேலர்கள் மத்தியில் நன்றாக அறியப்பட்டவன் என்று தெரிகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. மு. 612 க்கும் 605 க்கும். இடையில் எழுதப்பட்டது.
தென்தேசமான யூதா ராஜ்ஜியம் சிறைப்படுமுன் எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
தென்தேசமான யூதா ராஜ்ஜிய மக்களுக்கும், உலகத்திலுள்ள எல்லா தேவமக்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
சத்துருக்கள் வசம் ஏன் தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஜனம் பாடுப்பட வேண்டுமென்று ஆபகூக் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான். தேவன் அந்த கேள்விக்கு பதில் கொடுத்தார், ஆபகூக்கின் விசுவாசம் பலப்படுத்தப்பட்டது. யெகோவா தான் தம்முடைய மக்களை பாதுகாக்கிறவர், அவரை விசுவாசிக்கிறவர்கள் பிழைப்பார்கள், யெகோவா வல்லமையுள்ள யுத்தவீரர், அநியாயம் செய்கிற பாபிலோனியர்களை ஒரு நாளில் நியாயம் தீர்ப்பார் என்று பறைசாற்றுவதற்காக இந்த புத்தகம் எழுதப்பட்டது. பெருமையுள்ளவர்கள் தாழ்த்தபடுவார்கள், விசுவாசத்தினால் நீதிமான்கள் பிழைப்பார்கள் என்று இந்த புத்தகம் சித்தரிக்கிறது. 2:4.
மையக் கருத்து
சர்வ வல்லமையுள்ள தேவனை விசுவாசிக்கவேண்டும்.
பொருளடக்கம்
1. ஆபகூக் குறைகூருகிறான் — 1:1-2:20
2. ஆபகூக்கின் ஜெபம். — 3:1-19