நாகூம்
ஆசிரியர்
நாகூமின் ஆசிரியர் நாகூம் என்று 1:1 ல் கூறப்பட்டுள்ளது. நாகூம் என்பதற்கு தேற்றரவாளன் என்று அர்த்தம். அசீரியா ராஜ்ஜியத்தின் நினிவே பட்டணத்து மக்கள் மனம்திரும்பும்படி அழைக்கிறான். 150 வருடங்களுக்கு முன்பு யோனாவின் செய்தியினால் நினிவே மக்கள் மனம்திரும்பினார்கள். இப்பொழுதோ மறுபடியும் விக்கிரகராதனைக்கு போய்விட்டார்கள்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. 620 க்கும் 612 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
இரண்டு சரித்திர நிகழ்ச்சிகள், நினிவேயின் வீழ்ச்சி, மற்றும் தேபெஸின் வீழ்ச்சியின் மத்தியில் நாகூம் புத்தகம் எழுதப்பட்டதால், இதின் காலம் சுலபமாக கண்டுப்பிடிக்கப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
அசீரியர், இஸ்ரவேலின் பத்து வடஇராஜ்ஜியங்களில் உள்ள கோத்திரங்களை சிறைப்பிடித்து போய் விட்டவர்களுக்கும், இதே மாதிரி நமக்கும் நடக்கலாம் என்று பயந்திருந்த தென்ராஜ்ஜிய யூதா மக்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவனுடைய நியாயம் சரியானது, நிச்சயமானது. தேவன் தயவு காட்டினாலும் தன்னுடைய நீதி நியாயத்தை புரட்டமாட்டார். இந்த தீய பாதையிலேப் போனால் என்ன அழிவு வரும் என்று 150 வருடங்களுக்கு முன்னரே, யோனா தீர்க்கதரிசி மூலமாக எச்சரிக்கப்பட்டார்கள். யோனாக் காலத்து நினிவே மக்கள் மனம் திரும்பினார்கள், இன்றோ என்னும் அதிகமாக தீமை செய்கிறார்கள். அசீரியர்கள் தாங்கள் அடைந்த வெற்றிகளினிமித்தம் மூர்க்கவெறியர்களாகி விட்டனர். ஆகையால், தேவன் அவர்களை நியாயம் விசாரிக்கபோவதால், யூதா மக்கள் சோர்ந்து போகவேண்டாம் என்று சொல்லுகிறான்.
மையக் கருத்து.
ஆறுதல்.
பொருளடக்கம்
1 தேவனின் மகிமை — 1:1-14
2 நினிவே மேல் வரும் தேவனின் நியாயத்தீர்ப்பு. — 1:15-3:19