யோனா
ஆசிரியர்
யோனா தான் இதன் ஆசிரியர் என்று 1:1, ல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நாசரேத் ஊருக்கு அருகில் உள்ள காத் ஏபர் என்ற ஊரை சேர்ந்தவன். இப்பொழுது கலிலேயா என்று அழைக்கப்படுகிறது. 2. ராஜா (7:11-20) இஸ்ரவேலின் வடக்கு ராஜ்ஜியத்திலிருந்து எழும்பின சில தீர்க்கதரிசிகளில் யோனாவும் ஒருவனாயிருந்தான். தேவனுக்கு கீழ்படியதவர்களுக்கும் தேவன் கிருபையாய் பொறுமையாய் இருந்து இரண்டாம் வாய்ப்பையும் கொடுகிறார் என்று இந்த புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 793 க்கும் 450 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
இந்த சரித்திரம் இஸ்ரவேலில் தொடங்கி, மத்தியதரைக்கடலில் உள்ள யோப்பா துறைமுகத்திற்குப் போய், தைக்ரிஸ் நதிப்பக்கம் உள்ள அசீரிய தேசத்தின் தலைநகரமான நினிவே பட்டணத்தில் முடிகிறது.
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேல் ஜனங்களுக்கும் வேதத்தை வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
கீழ்படியாமையும், எழுப்புதலும் இந்த புத்தகத்தின் கருத்துகளாகும். பெரிய மீனின் வயிற்றிலே மனம்மாறின யோனாவின் வித்தியாசமான அனுபவம் எழுதப்பட்டிருக்கிறது. அவனுடைய கீழ்படியாமை தன் எழுப்புதலுக்கும் மாத்திரமல்ல, நினிவே, தேசத்திற்கும் முழுவதும் எழுப்புதல் வந்தது. தேவனுடைய செய்தி ஒரு குறிப்பிட்ட ஜனங்களுக்கு மாத்திரமல்ல, உலகமனைத்திற்கும் சொந்தமாகும். தேவன் உண்மையான மனம்திரும்புதலை விரும்புகிறார். மனிதர்கள் காணும்படி செய்கிற நல்லக் காரியங்களை அல்ல, நம்முடைய இருதய மாறுதலையே விரும்புகிறார்.
மையக் கருத்து
எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கும் தேவனின் கிருபை.
பொருளடக்கம்
1. யோனாவின் கீழ்படியாமை — 1:1-14
2. யோனாவை பெரிய மீன் விழுங்கிவிட்டது — 1:15, 16
3. யோனாவின் மனம்திரும்புதல் — 1:17-2:10
4. யோனா நினிவேயில் பிரசங்கிப்பது — 3:1-10
5. தேவனுடைய இரக்கத்தின் மேல் யோனா கோபம் கொள்ளுகிறான் — 4:1-11