ஏசாயா
ஆசிரியர்
ஏசாயா புத்தகத்தின் பெயர், ஆசிரியர் ஏசாயா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் ஒரு தீர்க்கதரிசினியை மணந்தவர். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தன. (ஏசாயா 7:3; 8:3). ஏசாயா யூதா தேசத்தின் இராஜாக்களாகிய, உசியா, யோதாம், ஆகாஸ் எசேக்கியா என்பவர்களின் நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தவன். ஏசாயா 1:1; பொல்லாத இராஜவாகிய மனாசேயின் ஆட்சியில் மரணத்தை அடைந்ததாக கருதப்படுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்:
ஏறக்குறைய கிமு 740 க்கும் 680 கிமுக்கும். இடையில் எழுதப்பட்டது.
உசியா இராஜாவின் கடைசி நாட்களிலிலும் யோதாம், ஆகாஸ் எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும் எழுதப்பட்டதாக எண்ணப்படுகிறது.
யாருக்காக எழுதப்பட்டது?
முதலாவதாக தேவனின் கட்டளைக்கு கீழ்படியாத யூத தேசத்தின் ஜனங்களுக்கும் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள்.
எழுதப்பட்ட நோக்கம்:
பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி விரிவான காரியங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வருகையின் நோக்கம் (ஏசாயா. 40:3-5), அவருடைய கன்னிப்பிறப்பு (7:14), அவர் நற்செய்தியை பிரசங்கித்தல் (61:1), அவருடைய பலியான மரணம் (52:13-53:12) தன் ஜனங்களை தம்மிடம் சேர்த்துக் கொள்ள திரும்ப வருதல். (60:2-3). ஆகியவைகளாகும். முக்கியமாக யூதா தேசத்தின் மக்களுக்கு தீர்க்கத்தரிசனம் சொல்ல அழைக்கப்பட்டவன். யூத தேசத்தில் எழுப்புதல்களும் கீழ்படியமைகளும் நடந்துக்கொண்டு இருந்தன. யூத தேசத்திற்கு அசீரிய தேசத்திலிருந்தும் எகிப்து தேசத்திலிருந்தும் அழிவுக்கான பயமுறுத்தல்கள் வந்துகொண்டிருந்ததது ஆனால் தேவனுடைய இரக்கத்தால் காக்கப்பட்டார்கள் ஏசாயா, பாவத்திலிருந்து மனம்திரும்பும் செய்திகளையும், வருங்காலத்தில் தேவனுடைய விடுதலைக்காக நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கும் செய்திகளையும் அறிவித்தான்.
மையக் கருத்து:
இரட்சிப்பு
பொருளடக்கம்:
1. யூத தேசத்திற்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் — 1:1-12:6
2. பிற நாடுகளுக்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் — 13:1-23:18
3. வருங்கால உபத்திரவங்கள் — 24:1-27:13
4. இஸ்ரவேல், யூத தேசங்களுக்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் — 28:1-35:10
5. எசேக்கியா, ஏசாயாவின் சரித்திரம். — 36:1-38:22
6. பாபிலோனின் காரியங்கள் — 39:1-47:15
7. தேவ திட்டமான சமாதான அறிவிப்புகள். — 48:1-66:24