1 சாமுவேல்
ஆசிரியர்
இந்த புத்தகத்தில் ஆசிரியரைப்பற்றி எதுவும் சரியாக குறிப்பிடவில்லை. ஆனாலும் சாமுவேல் தான் எழுதியிருக்க வேண்டும். 1. சாமுவேல் 1:1-24:22 வரை சாமுவேல் தீர்க்கதரிசியினுடைய வாழ்க்கையை இந்நூல் விவரித்து காட்டுகிறது. இதை தீர்க்கத்தரிசி சாமுவேல் தான் எழுதியிருக்கிறான் என்று கருதப்படுகிறது. தீர்க்கதரிசி நாதன் என்பவரும் காத் என்பவரும் இதில் சிலப் பகுதிகளை எழிதியுள்ளர்கள் என்று கருதப்படுகிறது. (1. நாளாகமம் 29:29).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி மு. 1,050 க்கும் 722 கி மு. க்கும். இடையில் எழுதப்பட்டது. 1. சாமு. 11:8; 17:52; 18:16; 2. சாமு. 5:5; 11:11; 12:8; 19:42-43; 24:1, 9.
யாருக்காக எழுதப்பட்டது
தாவீதின் அரசாட்சியின் தெய்வீக நோக்கத்தையும் தேவையையும் இரண்டாய் பிரிக்கப்பட்ட இஸ்ரவேலர்களும் யூதா ஜனங்களும் அறிந்து கொள்ளத்தக்கதாக அவர்களுக்கும் நமக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவனால் கானான் தேசத்தில் நியாயதிபதிகளின் வாயிலாக வழி நடத்தப்பட்ட இஸ்ரவேலர்கள், மன்னர் ஆட்சியின் கீழ் வந்ததையும் சாமுவேல் கடைசி நியாயதிபதியாக இருந்தான். சவுல் தாவீது ஆகிய இரண்டு நபர்களை இராஜாக்களாக அபிஷேகம் செய்தான்.
மையக் கருத்து
மாற்றம்
பொருளடக்கம்
1. சாமுவேலின் வாழ்க்கையும். ஊழியமும் — 1:1-8:22
2. இஸ்ரவேலின் முதல் இராஜவான சவுலின் வாழ்க்கை — 9:1-12:25
3. இராஜவான சவுலின் தோல்விகள் — 13:1-15:35
4. தாவீதின் வாழ்க்கை — 16:1-20:42
5. இஸ்ரவேலின் இராஜாவாக தாவீதின் அனுபவங்கள் — 21:1-31:13