ரூத்
ஆசிரியர்
இந்த புத்தகத்தில் இதின் ஆசிரியர் யார் என்று சரியாக குறிப்பிடவில்லை. பாரம்பரியம் இந்த புத்தகத்தை தீர்க்கத்தரிசி சாமுவேல் எழிதினான் என்று கூறுகிறது. மிகவும் அழகான உண்மையான சிறிய கதை என்று அழைக்கப்படுகிறது. கடைசி வசனங்கள் தாவீது அபிஷேகம் செய்யப்பட்டபிறகு எழுதப்பட்டது என்று உறுதியாகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. மு. 1,030 க்கும் 1,010 கி மு. க்கும். இடையில் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தின் நிகழ்சிகள் நியாயதிபதிகள் காலத்தில் நடந்தது.
இவைகள் இஸ்ரவேலர்கள் விடுதலையான காலத்துக்கும் கானான் தேசத்தை ஜெயித்ததிற்கும் சம்பத்தப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
யாருக்காக எழுதப்பட்டது என்று இந்த புத்தகத்தில் தெளிவாக கூறப்படவில்லை. தாவீதின் பெயர் குறிப்பிட்டு இருப்பதினால் இஸ்ரவேலின் ஐக்கிய இராஜ்ஜியத்தின் காலத்தில் எழுதப்பட்டு இருக்கலாம். 4:22.
எழுதப்பட்ட நோக்கம்
இந்த புத்தகம் தேவனுக்கு கீழ்படிவதினால் உண்டாகும் ஆசிர்வாதங்களை காட்டுகிறது. தேவனுடைய உண்மையையும் அன்பையும் இது காட்டுகிறது. ஜனங்களுடைய கண்ணீர் ஜெபத்திற்கு தேவன் பதில் அளிப்பதையும் அவர் சொன்னதை செய்கிறவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. சமூகத்தினால் கைவிடப்பட்ட விதைவைகளான நகோமி, ரூத்தை தேவன் அற்புதவிதமாக ஆசிர்வதித்ததினால் எரேமியா, யாக்கோபில் சொல்லப்பட்டபடி நாம் கூட அவர்களுக்கு உதவி செய்ய சொல்லுகிறார். எரேமியா 22:16; யாக்கோபு 1:27.
மையக் கருத்து
மீட்பு
பொருளடக்கம்
1. நகோமியும் அவள் குடும்பத்தாரும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் — 1:1-22
2. வயலில் கதிர் பொறுக்கும்போது நகோமியின் உறவினனான போவாசை, ரூத் சந்திக்கிறாள் — 2:1-23
3. மறுபடியும் போவாசை சந்திக்க நகோமி, ரூத்துக்கு ஆலோசனை கூறுகிறாள் — 3:1-18
4. ரூத் மீட்கப்பட்டாள், நகோமி மறுபடியும் மகிழ்ச்சி பெறுகிறாள் — 4:1-22