சங்கீதம் 15
தாவீதின் பாடல்.
1 யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்?
யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?
2 உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி,
மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
3 அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும்,
தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும்,
தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.