எஸ்தர்
ஆசிரியர்
இந்த புத்தத்தின் ஆசிரியர் யூதனாயும் பெர்சியா இராஜ்ஜியத்தின் அரண்மனையின் காரியங்களை அறிந்தவனாயும் இருந்தான். அரண்மனையின் காரியங்கள், பாரம்பரியங்கள், நிகழ்ச்சிகளை தன் கண்களால் கண்டவனால் எழுதப்பட்டது. செருபாபேல் தலைமையில் யூதா தேசத்திற்கு திரும்பி வந்தவர்களுக்கு எழுதப்பட்டது என்று வேத வல்லுனர்கள் நம்புகிறார்கள். சிலர் மொர்தெகாய் தான் இதன் ஆசிரியர் என்கிறார்கள். சிலர் மற்றவர்கள் என்று சொல்கிறார்கள்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 464 க்கும் 331 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது. இந்த சரித்திர கதை பெர்சியாவின் இராஜாவாகிய அகாஸ்வேருவின் காலத்தில்.
தலைநகரமான சூசானின் அரண்மனையில் நடந்தது.
யாருக்காக எழுதப்பட்டது
பூரிம் பண்டிகை ஆரம்பமானக் காரணத்தை யூத ஜனங்கள் அறிந்துக் கொள்ள இந்த எஸ்தர் புத்தகம் எழுதப்பட்டது. எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் எப்படி மீட்பு அடைந்தார்களோ அதே மாதிரி இந்த பண்டிகை யூதர்களின் அழிவிலிருந்து இரட்சிக்கப்பட்டதைக் குறித்து ஞாபகப்படுத்தப்பட வருடம்தோறும் கொண்டாடப்படுகிறது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் மனிதர்களின் சித்தத்தை மாற்றி, வெறுப்புகளை நொறுக்கி, ஆபத்துக்காலத்தில் மனிதர்கள் மத்தியில் கிரியை செய்து உதுவுகிறார் என்பதை காட்டுகிறது. தம்முடைய ஜனங்கள் மத்தியில் தேவன் கிரியை செய்கிறார் என்று காண்பிக்கிறது. தம்முடைய தெய்வீக திட்டங்களை நிறைவேற்ற மனிதனுடைய தீர்மானங்களையும், செயல்களையும் உபயோகப்படுத்துவது போல் எஸ்தரின் வாழ்க்கை சூழ்நிலைகளை உபயோகப்படுத்திக்கொண்டார். பூரிம் பண்டிகை ஸ்தாபிக்கப்பட்டதை எஸ்தர் புத்தகம் பதிவு செய்கிறது. இன்றைய காலத்திலும் யூதர்கள் பூரிம் பண்டிகை நாட்களில் எஸ்தர் புத்தகத்தை வாசிக்கிறார்கள்.
மையக் கருத்து
மாறாட்டம்/ தவறான போக்கு
பொருளடக்கம்
1 எஸ்தர் இராணியாக தெரிந்தெடுக்கப்படுகிறாள் — 1:1-2:23
2 தேவ ஜனங்களுக்கு வந்த பேராபத்து — 3:1-15
3 எஸ்தரும் மொர்தெகாயும் எடுத்த நடவடிக்கைகள் — 4:1-5:14
4 மரண ஆபத்திலிருந்து யூதர்களுக்கு விடுதலை — 6:1-10:3