1 இராஜாக்கள்
ஆசிரியர்
இந்த புத்தகத்தின் ஆசிரியர் யார் என்று சரியாக குறிப்பிட முடியாது. சில வேத வல்லுனர்கள் எஸ்றா, எரேமியா, எசேக்கியேல் என்பவர்கள் என கருதுகிறார்கள். ஏனென்றால் இந்த புத்தகம் 400 வருட சரித்திரத்தை விவரிக்கிறது. இந்த புத்தகத்தின் சில இலக்கிய நடைமுறைகள் பல ஆசிரியர்களால் அல்லது ஒரு ஆசிரியரால் இந்த புத்தகம் தொகுக்கப்பட்டு இருக்கலாம் என்று சுட்டிக் காட்டுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 590 க்கும் 538 க்கும். இடையில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.
முதல் ஆலயம் நிற்கும்போது இது எழுதப்பட்டது (1 இராஜாக்கள் 8: 8)
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேல் ஜனங்களுக்கும் வேதாகமம் வாசிக்கிற அனைவருக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்:
இந்த புத்தகம் 1 மற்றும் 2 சாமுவேலின் தொடர்ச்சியாக தாவீதின் மரணத்தின் பின் எழும்பின சாலோமொனின் இராஜ்ஜியா பாரத்தைக் குறித்து விவரிக்கிறது. இஸ்ரவேலின் ஏக இராஜ்ஜியமாக தொடங்கி இரண்டாகப் பிரிந்து யூதா, இஸ்ரவேல் என இரண்டு இராஜ்ஜியங்களான சரித்திரத்தை காட்டுகிறது.
மையக் கருத்து:
இடையூறுகள்.
பொருளடக்கம்
1. சலோமொனின் அரசாட்சி — 1:1-11:43
2. பிரிக்கப்பட்ட இராஜ்ஜியங்கள் — 12:1-16:34
3. எலியாவும் ஆகாபும் — 17:1-22-53