எண்ணாகமம்
ஆசிரியர்
இந்த புத்தகத்தின் ஆசிரியரும் பஞ்சாகமத்தின் மற்ற நான்கு புத்தகங்களும் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியான மோசேயினால் எழுதப்பட்டது என்று யூத பாரம்பரியம் சொல்லுகிறது. இந்த புத்தகத்தில், ஜனத்தொகைக் குறித்தும், கோத்திரங்களைக் குறித்தும், ஆசாரியர்கள் வம்சங்களைக் குறித்தும் மற்றும் பல இடங்களைக் குறித்தும் கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. எகிப்து தேசத்தை விட்டு வெளியே வந்த இரண்டாம் வருடத்திலிருந்து 40 வது வருடம் வரை சீனாய் மலை பக்கமாகவே ஏறக்குறைய 38 வருடமாக இஸ்ரவேலர்கள் பாளையும் இறங்கியிருந்த காலங்களில் நடந்த சம்பவங்களை இந்த புத்தகம் விவரிக்கிறது. 38 வருட காரியங்களை குறித்து அதிகம் சொல்லாமல் 2 ஆம் வருடத்திலும் 40 ஆம் வருடத்திலும் நடந்த சம்பவங்களைக் குறித்தும் அதிகமாக விவரிக்கிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 1446 க்கும் 1405 க்கும். இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறிய 2 ஆம் வருடத்தில் தொடங்கின சம்பவங்கள் 1:1 வசனத்தில் தொடங்குகிறது.
யாருக்காக எழுதப்பட்டது
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்திற்குள் பிரவேசிக்க செய்யப்பட்ட பிரயாணங்களின் ஆவணங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்த புத்தகத்தில் எழுதி கொடுக்கபட்டிருக்கிறது. பரலோகத்தை நோக்கி பிரயாணம் செய்கிற நமக்கும் நம்முடைய தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்துகிறது.
எழுதப்பட்ட நோக்கம்
கானான் தேசத்திற்குள் பிரவேசிக்க ஆயத்தமாயிருந்த, இஸ்ரவேலின் இரண்டாம் சந்ததியார்கள் விசுவாசத்தோடு தேவன் வாக்குதத்தம் செய்த தேசத்தை சுதந்திரித்துக் கொள்ள இந்த எண்ணாகமம் மோசேயினால் எழுதப்பட்டது. (எண்ணாகமம். 33: 2). தேவன் தன் தேச ஜனங்களுக்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது. முதல் சத்தியார் தேவனுடைய உடன்படிக்கைக்கு உண்மை இல்லாதவர்களாய் போனாலும் தேவன் தம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவராயிருக்கிறார். ஜனங்கள் முரட்டாட்டம் செய்து வணங்காக் கழுத்துள்ளவர்களாய் இருந்தாலும் இந்த இரண்டாம் சந்ததிக்கு தாம் வாக்கு செய்த தேசத்தை கொடுத்து ஆசிர்வதித்தார்.
மையக் கருத்து
பிரயாணங்கள்.
பொருளடக்கம்
1. வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க ஆயுத்தம் ஆகுதல் — 1:1-10:10.
2. சீனாயிலிருந்து காதேசுக்கு செய்த பிரயாணங்கள் — 10:11-12:16
3. மோசேக்கு விரோதமாக எழுந்ததால் உண்டான தாமதங்கள் — 13:1-20:13
4. காதேசிலிருந்து மோவாபின் சமவெளிக்கு செய்த பிரயாணங்கள் — 20:14-22:1
5. மோவாப் தேசத்தில் பிரவேசித்த இஸ்ரவேலர் கானான் தேசத்தை சுதந்தரிக்க எதிர்ப்பார்ப்போடு இருந்தார்கள் — 22:2-32:42
6. பின் சேர்க்கை, மற்றக் காரியங்களைக் குறித்த உபதேசங்கள் — 33:1-36:13